- இளையராஜா, ஒரு கூரான மயிலிறகு . தேம்பிக் கொண்டே சிணுங்கும் வயலின், இளம் பெண்ணின் எச்சில் முத்தம் போல் இருக்கிறது. இளையராஜாவும் காதலைப் போலத்தான் , சடாரென ஒருநாள் போட்டுத்தாக்கும்.
- வரலாறு -உண்மையையும் பொய்யையும் சரிவிகித்தில் உண்டு செரித்த பேரழகுப் பன்றி ...
- கடவுளின் சாந்தத்தை விட பேயின் ஆக்ரோஷம் வலிமையானதாய் தோன்றுவதாலோ என்னவோ, உன்னை பேரழகுப் பேய் என்றே வர்ணிக்கத் தோன்றுகிறது ...
- எந்த ஒரு பெண்ணையும் சற்று உற்றுப்பார்த்தால், அழகுக்கான ஏதாவது ஒரு அம்சமாவது பிடிபட்டுவிடுகிறது ...
- நீரைச் சுத்திகரிக்கும் மீனுக்கு, சளியை உணவாக அளிப்பது போல் இருக்கிறது, பெருநகர வாழ்க்கை...
- பாவ ஆன்மாக்கள் அனைத்தும் , தூய்மையான அன்பின் நுனி விரலின் தீண்டலுக்காகவாவது காத்திருப்பவைதான் ...
- ரகுமானில் தொடங்கி ஹாரிஸை ரசித்து யுவனைப் பிடித்து வித்யாசாகரை வியந்து இறுதியில் வந்ததென்னவா இளையராஜாவிடம் தான் ...
- மென்னுணர்வுகளை கீறிவிடுவதுதான் இரவுகளின் இயல்பு போலும் ...
- சிக்னலில் காத்திருந்த நேரத்தை சேமித்தால் இன்னொரு வாழ்க்கைக்கான நேரம் கிடைத்துவிடும் போல ...
- என்னை நான் அந்தரங்கமாக உணரும் நேரம் இரவு மட்டுமே ...
- நான் எச்சில் விழுங்கும் சப்தம் எனக்கே கேட்க வைக்கும் உணர்வே என்னை ஒருசேர அற்பனாகவும் உன்னதனாகவும் எண்ணச் செய்கிறது ...
- நிர்பந்தத்திற்காய் ஓடிப்பழக்கப்பட்ட நாய்க்கு சுயமாய் நடக்கக் கூடத் தெரியாதுதான்.
- அரவணைப்புக்காய் ஏங்கும் இதயங்களெல்லாம் கொஞ்சம் கரடுமுரடாய்த்தான் இருக்கும் போல...
- சாவைப் போல எளிதானதில்லை அதைப்பற்றி சிந்திப்பது.
- அர்த்தம் புரிந்த சொற்களை விட, அர்த்தம் உணர முடிந்த சொற்கள் ஆழமானவை.
- கருவாச்சிகளின் அழகைச் சொல்வதற்கான வார்த்தைகள் இன்னும் முழுமையாய் கண்டுபிடிக்கப்படவில்லை போலும்.
- தோளில் புரளும் கூந்தலை கை கொண்டு ஒதுக்காமல், ஒரு சிறு தலைச் சிலுப்பலில சரி செய்யும் கருவாச்சிகள்தான் எவ்வளவு அழகு.
- இரவு, கனிவையும் காயத்தையும் ஒருசேரச் சொரிந்து விட்டு விடுகிறது...
- கற்பனையிலும் கனவிலும் வரும் பெண்களுக்கு இணையான அழகை நிஜத்தில் கண்டிலன் :(
- புத்தன் தன்னை கௌதம சித்தார்த்தனாகவும், நாம் கௌதம சித்தார்த்தனை புத்தனாகவும் கண்டோம் #அவ்ளோதான் வாழ்க்க
Thursday, 19 November 2015
சும்மா...
Subscribe to:
Post Comments (Atom)
தொடக்கம் இனிமையாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
ReplyDelete