Pages

Monday, 22 December 2025

அன்னை

அவள் நடந்து சில கணம் கண்டிருக்கிறேன்.
கனத்த உடல்.
அகலச் சிரித்தால் மட்டுமே தெரியும் கருப்புப் பல் ஒன்று.
வெள்ளை நிறம்.
முகமதில் இரண்டங்குல இடைவெளியில் சிற்சில மச்சங்கள்.
கடும் சொற்கள்,
கருணை சுரக்கும் முலைகளென
அவள் அன்னையே தான்.
சம இருக்கையில் தான் நான் எப்போதும் அமர வைக்கப்பட்டிருக்கிறேன்.
காபி கொடுக்கப்படாமல் நான் அனுப்பப்பட்டதேயில்லை.

ஆங்கிலம் எனக்குச் சுத்தமாய்த் தெரியாதபோது ஆங்கிலத்திலும்,
பின் அரைகுறையாய் பழகியதும் அவள் தன் உடைந்த தமிழிலும் அளவளாவ முயன்றாள்.
இழுத்துச் சாத்திய கதவுக்குள்ளிருந்து அவளிடம் பேசிக் கொண்டேன்.  அவளதை அறிந்தாலும் காட்டிக் கொண்டதில்லை.  அதனாலேயே அவள் அன்னை.  என் அன்னை எனச் சொல்லமாட்டேன்.  ஏனெனில் அன்னை, அன்னை மட்டுமே.  உலகு புரக்கும் கருணை சுமக்கும் பெருங்கொங்கை கொண்ட அன்னை...

ஆம்... ஆம்... ஆம்... என எக்காளம் ஒலிக்கிறது.  எனக்குக் கேட்கிறது.  எங்கும் எதிரொலிக்கட்டும்.

No comments:

Post a Comment